(பாலைவன லாந்தரின் "உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்" கவிதை தொகுப்பு குறித்து என் பார்வை)
தூரத்தில் கேட்கும் பறவையின் பா டல் போன்று பிறந்த குழந்தையின் அழுகை போன்று மழையின் சப்தங்கள் போன்று அருவியின் சங்கீதம் போன் று உங்களுக்கு பிடித்தவரின் உங் களுக்காக சிந்தும் புன்னகை போன்று எதிர்பாரா நேரத் தில் உங்கள் முன் தோன்றும் கடவு ளை போன்று அல்லது சாத்தனை போன்று ஒரு சிலிர்ப்பாக, ஏகாந்தமாக, ஆ னந்தமாக கவிதை இருக்க வேண்டும் என்றால்....
புத்த விகாரங்கள் நொறுங்கி விழு ம் ஓசை, மிக அருகில் இனஉறவுகள் இ ருந்தும் கைவிடப்பட்ட நிலத்தில் முள்வேலிக்குள் அடங்கி போகும் அ வலகுரல், தன் வாரிசின் பிளக்கப் பட்ட தலையுடன் கையிலேந்தி நிற்கு ம் அந்த தந்தையின் அழுகுரல் இளவ ரசனின் அலறலை கடத்தி செல்லும் ரயி லோசை இன்றளவும் ஏதேனும் ஓரிடத் தில் வல்லுறுவுக்கு இரையாக்கப் பட்டு கொண்டிருக்கும் பெண்ணின் க டைசி கேவல், அரசர், ஆங்கிலேயர், அரசியல்வாதி ,அதிகாரிகள் என்று அதிகாரங்களின்கொக்கலிப்புகள் இ வைகளை என்ன சொல்வீர்கள்? இதனை எ திர் நோக்கும் உங்களின் மனக்கு ரலை நீங்கள் கேட்டு இருக்கீர் களா? இவ்விதமான குரலையும் கவிதை என்றால் மறுப்பு சொல்வி ர்களா..
பாலைவன லாந்தரின் ‘உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்’ இப்படியான அவ லத்தை, கேவலத்தையும் வன்மத்தின் கழிவிரக்கத்தை தனிமையின் ஆற்றா மையை பொதுவின் அதிகாரத்தை கேள் வி கேட்க/காட்சிப்படுத்த அவசர அ வசரமாய் முயற்சித்து இருக்கிறா ர். (இங்கே இன்னும் ஒன்றையும்சொல்லி க்கொள்ள விருப்பபடுகிறேன், 'பாலை வன லாந்தர்" என்கிற இந்த பெயர் கு றித்து எனக்கு சிலகேள்விகள் இரு க்கிறது இதனை பின்பு கேட்கிறேன் .)
பெரு நகரங்களில் மட்டுமே சாத் தியமான பல்நோக்கு வணிக வளாகம் இப்பொழுதுT.கல்லுபட்டியிலும் நி கழத் தொடங்கி விட்டது. நம் பார் த்துக் கொண்டிருக்கும் போதே அதி விரைவாகமாறும் உலகமிது நேற்று பா ர்த்த ஒன்றை உள்வாங்குவதற்குள் இன்று வேறு ஒன்றாகமாறிபோனதை நா ம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டு ம். ‘’அந்த காலத்துல.. என்பது அந்த காலத்துல குறைந்த பட்சம் 25- வரு டத்திற்கு குறையாமல் இருந்தது, இன்று அது குறைந்து குறைந்து 25 நாட்களாக மாறி விட்டது. இதனை பதி வு செய்ய நினைபவர்கள் அவசர அவசர மாய் குறிப்பெடுக்கவேண்டி இருக் கிறது. கண நேரத்தில் தோன்றி மறை யும் அவைகளுக்கு பெயிரிடும் பொ றுப்பையும் உணரும் போது மார்க்வெ ஸின் மக்காந்தோ நினைவிற்கு வரு கிறது.இங்கே பாலைவன லாந்தரும்இதை போகிற போக்கில் அவசர அவசரமாக கு றிப்பெடுக்கிறார்.
தீபாவளி மலர் மற்றும் வார இதழ் களில் கொடுக்கப்பட்ட இலவச இணைப் புகளில் இருந்து ஜியோ ஜிம்வரை இ ந்த உலகத்தில் எல்லாவற்றுக்கும் விலை உண்டு. எல்லா வற்றுக்கு ம் என்றால் ஆம்,எல்லாவற்றுக்கு ம் தான். எதிர்ப்பதும் கண்டிப் பதும் கூட இங்கே வணிகமயமாகி போ னதின்காரணம் உலகமயமாக்கலின் பி ன் விளைவு என்று போகிற
போக்கில் சொல்லி விட்டு போகும் ‘விலை’ என்னும் இந்த கவிதையை மு க்கியமான கவிதையாக நான் பார்க்கி றேன்.
விலை
ஒரு மாத்திரை
கொஞ்சம் விஷம்
ஏதோ ஒரு விலங்கின் கழிவு
இறந்த பிண்டங்களின் அழுகல்
துர்நாற்றமடிக்கு தண்ணீர்
விலை ஐம்பது பைசா
ஒரு பரோட்டா
வேதிப்பொருட்களின் கழிவு
அயல்நாட்டிலிருந்து தூக்கிஎறி யப்பட்ட
இரண்டாம் தரம் பூச்சி மருந்து களின் மரவள்ளிகிழங்குகள்
கலப்பட எண்ணெயின் தீக்குழி
விலை ஐந்து ரூபாய்
பேர் அண்ட் லவ்லி
ஏழு நாட்களில் பருக்கள் மறையும்
ஏழு வாரங்களில் பெட்ரோமாக்ஸ் எரி யும்
இல்லையென்றால் பணம் வாபஸ்
வாபஸ்வாங்கவேண்டிய முகவரி
காந்தக் கோடுகளில் உள்ளது
விலை நாற்பத்தியேழு ரூபாய்
தியான மடம்
ஒரு முறை இந்த அமைதியை
அனுபவித்து பாருங்கள்
மனம் உடல் இறகு போல இலேசாகும்
வாழ்வு வானம் வசப்படும்
புத்துணர்வு எழும்
அனுமதி ஒரு இலட்சம் மட்டுமே
வெள்ளைக்காரனுக்கு முன்னுரிமை
குவார்ட்டர்
எங்கேயும் எப்போதும் கிடைக்கும்
சந்தோஷமா துக்கமா இங்கே வாங்க
தெருக்கோடியில் வீழ்ந்து கிடப் பவனை
நட்சத்திர விடுதியில் மதுவருந் தியவன்
ச்சீ குடிகார நாய் என்று சொல்வா ன்
வெறும் நானூறு ரூபாய்
-----------------
இதிலிந்து தெரிந்துக் கொள்ள வேண் டியது, இந்த விலையை யார் / எதன் பொருட்டு நிர்ணயம்செய்கிறார் கள் என்பதே...
அடுத்ததாக, தற்போது நவீன கவிதை யில் எழுதுபவர்கள் கண்டிப்பாக ந கரத்தை நகரம்சார் வாழ்வைசூழலை பதிவு செய்து விடுகிறார்கள். அப் படியான கவிதை :
இறுதிக்காற்று
-------------------
பின்னங்கால் பிடரியடிக்க ஓடி வருகிறான்
இருதயத்துடிப்பு எகிர எகிர
வாயிற்படியில் வாய்பிளந்து
சாய்ந்து கிடக்கிறாள் கிழவி
அவளது தொண்டைக் குழியில்
விரல் வைத்து அழுத்துகிறான்
சினத்துடன் வெளிவருகிறது
ஏழெட்டு கருந்தேள்கள்
உத்தரத்தில் தொங்குகிறாள் மனாளி
அந்தச் சீலையை
முகர்ந்து முகர்ந்து பார்க்கிறா ன்
வேற்று உயிரணுக்களின் வாசனை
கிடைக்கிறதா என
கோரைப்பாயில் குப்புற கிடக்கும்
ஆறுமாத மகனின் புட்டங்களின் வழி யாக
இறுதிக்காற்று பிரிந்து செல்வதை
அவன் பொருட்படுத்தவில்லை
கருகும் புனிதநூல்களின் வாடை
தேயும் மந்திரங்கள்
தூரத்து முத்தங்கள்
மூச்சிரைக்கும் வளர்ப்பு பிராணி
கொல்லையில் அலங்கோலமாக
வயிற்றில் அம்மிக்குழவி நசுங்கி
தொண்ணூறு சதவீதம உயிரற்று கிடக் கும்
மகளை இடக்காலால் ஒதுக்கிவிட்டு
மிச்ச அரளிவிதைகளை விழுங்குகிறா ன்
இப்போதெல்லாம் இந்த கனவிற்கு
இவன் பதட்டப்படுவதில்லை
வெகு சாவகாசமாக
பறக்கும் முத்தங்களை வழங்கி
இருசக்கர வாகனத்தை உதைக்கும்
வெகுசனவாதி ஆகியிருந்தான் .
இந்த கவிதை இந்த நவீன காலகட்டத் தில் எந்த விதத்திலும் மறுக்க மு டியாத கவிதையாக எனக்கு தோன்றுகி றது. இதனை ICU வார்டுக்கு வெளி யே நின்று Candy Crush விளையாடும் மகாபுண்ணியவா ன்களுக்கும் தண்ணீர்க்கு பதிலாக நெரு ப்பை கொட்டி குளிபாட்டிய பேருந் தின் முன் செல்பிஎடுத்துக் கொள் பவர்களுக்கும் சமர்பிக்கலாம்.
எந்த காரணம் கொண்டும் யுத்தம் வே ண்டாம் என்று பல்வேறு முறையாக சொ ல்லப்பட்டு வருவதில் யுத்தங்களை அவ்வண்ணமே காட்சி படுத்துவது ஒரு முறை. அப்படியான யுத்தத்தின் கா ட்சிபடுத்தலை மிகச்சரியாக செய் து இருக்கிறார்.
ஈனத் தீ
--------------
கனத்த மௌனத்தைப் பாழ்படுத்த
எங்கேனும் ஒரு குண்டு வெடிக்கி றது
அந்தப் பகுதியின் அடர்ந்த இருளை கிழித்து
நெருப்புப் பிழம்புகளை சரமாரியா கத் தெளிக்கிறது
உறங்கிக்கொண்டிருந்த சிலர் அப் படியே
உருக்குலைந்து மரணித்து விடுகி ன்றனர்
குற்றுயிரும் குலையுயிருமாக அலறு ம் குரல்களுக்கு
நெருப்பினை விட நீளமான நாக்கு கள்
எரிந்துக் கிடக்கும் புனித நூலி ன் பாதி
மூக்குக் கண்ணாடியில் உடைந்த து ண்டுகள்
உருகி வடிந்துக்கொண்டிருக்கும் நெகிழி மேஜை மற்றும் இருக்கைகள்
கருகிய ரொட்டித்துண்டுகளைப் போ லுள்ள வீடுகள்
முழுமையாக சாம்பலாக்கத் தவறிய ஈ னத் தீ
யாருக்கோ சேரவேண்டிய குறுஞ்செய் தி
சிவப்பு விரல்களுடன் அழுத்தத்தி ற்காக காத்திருக்கிறது
வாட்ச்மேனின் துண்டுக் காலினடி யில்
முதலாளியின் மண்டை ஓடு
எலும்பு மஜ்ஜை சதை நரம்புகள் மற் றும் இன்னபிறவை
நாசியில் நீலத்துண்டு அணிந்த பரி சோதனையாளன்
கிரானைட் தளத்தில் உடைந்த மீன் தொட்டியிலிருந்து
இறந்த மீன் குஞ்சுகளை முறத்தில் சேகரிப்பது போல சேகரிக்கிறான்
வேடிக்கை பார்க்கும் கூட்டத்தி லிருந்து
ஆயிரத்தெட்டு கேள்விகள் குறைப் பிரசவமாகிறது
சிலர் சுயப்புகைப்படம் எடுக்கி ன்றனர்
சிலர் கொண்டை மைக்குகளில் கதை சொ ல்கின்றனர்
மூன்றாம் நாள் காலையில்
மரணித்தவர்களின் புகைப்படத்திற் கு முன்
மீச்சிறு நெருப்பை ஏற்றிவைக்கி றார்கள்
அதன் ஒளியில்
புகைப்பட விழிகள் மேலும் அச்சம் கொள்கின்றன .
--------------------
ஈழத்தில் யுத்தம் நடக்கும் போது தப்பி பிழைத்து இங்கே வந்தவர் கள், ஒவ்வொரு வானுர்தி கடக்கும் போதெல்லாம் அவர்தம் உடல் மொழியை நாம் அறிந்தவர் தானே?
ஒரு கவிதையின் முதல் வரி கடைசி வரியுடன் இணைக்க வேண்டும் அதே ச மயத்தில் எதிர் மனநிலையை கவிதை யின் இறுதி வரி செய்தே ஆக வேண் டும் என்பது ஒரு காலத்தில் சொல் லப்படாத விதியாகவே இருந்து. அதி லிருந்து தற்கால கவிதைகள் விலகி வருவது ஆறுதல். ஆனால் அப்படியான வகைமையில் தொகுப்பில் இடம் பெ ற்ற ‘மேய்ப்பவன்’ கவிதையை வைத் ததாலும்சொல்ல வந்ததை இன்னும் தெ ளிவாக சொல்லி இருக்கலாமோ என்று தோன்றுகிறது. ‘உங்கள்யுத்தத்தில் எனக்கு வேலை கொடுங்கள்‘ என்று தொடங்கும் கவி தை மேய்ப்பவனுக்கும் யுத்ததுக் கும்எதனை கொண்டு இணைக்கிறார் எ ன்று தெரியவில்லை? ‘மொழி இடக்கு செய்யும்’ என்பது இதுதானோ?
மேய்ப்பான்
-------------------------
உங்கள் யுத்தத்தில் எனக்கு வேலை கொடுங்கள்
எனது திறமையை சற்றும் கீழாக மதி ப்பிட வேண்டாம்
ஆயுதங்கள் பாதுகாக்கும் பணியைத் தராதீர்கள்
சுயபரீட்சை செய்யும் பழக்கம் என க்குண்டு
வீரர்களுக்கு உணவு சமைக்கும் பணி யைத் தராதீர்கள்
அன்னையைப் போன்று உப்பும் உரப் பும் விகிதமாகக் கலக்கத் தெரியா து
குதிரைகளை யானைகளை பழக்கும் பணி யைத் தராதீர்கள்
எனக்கு உணர்வு மொழிகள் அவ்வளவு தெரியாது
தலைமை வகிக்க பணிக்காதீர்கள் சகி ப்புத்தன்மை அறவே கிடையாது
இதையெல்லாம் கற்றுக் கொள்ளும் மு ன்னமே யுத்தம் சமீபித்து விடலா ம்
ஆதலால் எனக்கு மேய்ப்பன் வேலை கொ டுங்கள்
இரண்டு ஆட்டுக்குட்டிகளை தடவிக் கொடுத்து அமைதியாக
வேடிக்கை பார்க்கும் மேய்ப்பன் வேலை கொடுங்கள்
-----------------
இதோ போல தொகுப்பில் சில கவிதை களிலும், பல கவிதைகளில் சில வரி களிலும் ஒரு வித பதட்டம் தெரிகிறது (உம்: கா ரல் மார்க்ஸின் காட்சிப்பிழை, டெ னிம் புளு ஜீன்ஸை கடவுள் எதற்கா க படைத்தான், சவப்பெட்டிகளின் நா ற்புற ஆணிகள், ஆப்பிளின் விதை புற்றுநோயின் மூலக்கூறாக)இதனை,மு தல் முறையாக கொட்டிய வெளிச்சத் தில் கேமரா முன்னாடி நின்றவர் போன்ற பாவனையை 'பாலைவன லாந்தர்'
இந்த தொகுப்பில் அநேக கவிதைகள் அகத்தில் இருந்தே புறத்தில் இரு ப்பவற்றை சுட்டுகிறது மற்றும்சூ ழல வைக்கிறது. இதை இப்படி சொல் லலாம் படபடத்து காற்றில் உயர பற ந்து அலைவுறும் பட்டம்ஒன்றின் நூ ல்முனை, விரல் நுனியில் சுண்டப் படுவது போல் கவிதையில் இயங்கும் புறத்தை சுழற்றவும் உயர எழுப் பவும், அகம் தன் கட்டுபாட்டுக் குள் வைத்திருக்கிறது.
நான் முன்பு சொன்ன மாதிரி பெயர் குறித்து சந்தேகத்திற்கு இப்பொ ழுது வருகிறேன்:
இணையத்தில் இவரின் கவிதைகள் கா ணக் கிடைக்கும் போது இந்த பெயரை பார்த்து ஏதோஒரு ஃபேக் ஐடி என் று கடந்து சென்று இருக்கிறேன். 70-80 கள் வரை இப்படி புனைபெயரி ல்எழுதுவதற்கான சரியோ தவறோ ஒரு காரணம் இருந்தது, அதே காலகட்டத் தில் அதைமீறியவர்களும் உண்டு.. இன்றளவும் அது இருக்கிறதா.. அல் லது இந்த சமூக அமைப்பு பெண்என் பதாலேயே கட்டுப்பட்டு வைத்துக் கொள்கிறதா? இதனை தனது இயற்பெயரை பதிப்பதின்மூலமாகவே எதிர்த்து விட முடியாது என்றாலும் அதுவும் ஒரு விதமான எதிர்ப்பே. அதே சமய த்தில்கல்பனா, சுகந்தி சுப்ரமணி யம், குட்டி ரேவதி, சல்மா,சுகி ர்தராணி, மாலதி மைத்ரி, லீனாமணி மேகலை இவர்களில் ஆரம்பித்து இன் றும் எழுதியும் இயங்கியும் கொ ண்டிருக்கும் எழுத்தாளர் கவின் மலர்,சந்திரா, தமயந்தி, நாச்சி யாள் சுகந்தி, கவிதா முரளிதரன் பரமேஸ்வரி, உமாமோகன்,ஜெயராணி, லி விங் ஸ்மைல் வித்யா, நறுமுகை தே வி(இப்பொழுது நினைவில் தோன்றுபவர்களை) மற்றும் பலரும் தனக்கு வந்தஎதிர்ப்புகளை நேர் கொண்டும் முடிந்த வரையில் அதனை யும் பதிவு செய்தும் இருக்கிறா ர்கள்என்பதை கவனத்தில் கொள்ள வே ண்டும் என்பதை ஒரு தகவலாக சொல் லிக் கொள்ளவிரும்புகிறேன்.
இறுதியாக: அறிமுக கூட்டம் என் பதால் தொகுப்பு குறித்து எனக்கு தோன்றிய விமர்சனங்களை ஒருபத்தி யில் முடித்துக் கொள்கிறேன்.
மொழிக்கும் உணர்வுக்கும் இடையி ல் நிலவும் மெளனம்/சொல்லாடல் இவ ற்றைஅப்படியே கவிதைகளாக மாற்ற மு டியுமா என்று கேட்பதை விட மாற்ற வேண்டுமா என்றுசுயபரிசோதனை செ ய்து கொள்ளவது கவிதைக்கு நன்று. கவிதைக்கான வார்த்தைகள் வாக்கி யங்கள்நமக்கு எங்கிருந்து வேண் டுமானாலும் கிடைக்கலாம்.ஒடு நடை பயணத்தின் போது அல்லது ஒருநீண் ட நெடிய பயணத்தின் முடிவில், ஒரு நல்லிசையை கேட்ட போது கடற்கரை இளைப்பாறலின் போது அல் லது ஒரு கனவின்போது, யூமா வாசு கி கவிதைகளிலிருந்து அல்லது பி ரான்ஸிஸ் கிருபா கவிதைகளிலிருந் து, மனுஷ்யபுத்திரன் கவிதைகளிலிருந் து அல்லது கவிதைக்காரன் இளங்கோவி டமிருந்து அல்லது வலசை நேசமித் திரனிலிருந்து பெறலாம். இதுபெரு ம் பிழையும் அன்று. இங்கே எந்த வார்த்தைகளுக்கும் யாரும் சொந்த கொண்டாட முடியாது.ஆனால் அதனை ஒ ரு முறையாக ஒரு வடிவத்திற்கு கொண்டு வருவதும் அதனை நேர்படுத் தவும்ஏற்ற மனநிலைக்கும் குறிப் பாக அதற்குரிய காலத்திற்கும் ஒரு கவிஞர் காத்திருந்தே ஆகவேண்டு ம்.இதனை வரம்/சாபம் என்று எப் படி சொல்லிக் கொண்டாலும் சரி. இ தன் மூலம் வருடத்திற்கு சிலகவி தைகள் எழுதப்பட்டாலும் தவறில்லை . கவிதை அவ்வளவு பெரிய ஆகமசக்தி வாய்ந்தது இதனையாரும் மறுக்க போ வதில்லை.
தேர்ந்த தையல்காரனுக்கும் அறுவை சிகிச்சைக்கு பின் தைக்கும் மரு த்துவ தாதிக்கும் வேறுபாடுஉண்டு . கவிதைக்கு ஜோடனையான மிக அழகிய வேலைப்பாடு மட்டும் அல்ல மிகச் சரியாகபொருந்தியும் போகவேண்டு ம். சொற்களின் சேர்ப்பில் கவனம் இருக்க வேண்டும். இரு வெவ்வேறு சொற்களின் சேர்ப்பு ஒரு கவிதையை வினோத உருவமாக அமைந்து பொருந் தி போகாத உடுப்பைஅணிந்து கொண்டு பொது வெளியில் வீறு நடை நடப் பது போன்ற உணர்வை தோற்றிவிக்ககூ டும் சிக்கலை கவிஞர் இனி வரும் நாட்களில் தவிர்ப்பர் என்று நம் புகிறேன் .
கவிஞருக்கு வாழ்த்துகள்
வாய்ப்பு தந்த அனைவருக்கும் எங் களுக்கென நேரம் ஒதுக்கிய உங்களு க்கும் எனது நன்றியும் அன் பும்.
வேல் கண்ணன்
நன்றி : கவிஞர் பாலைவன லாந்தர், Shruti TV மற்றும் சால்ட் பதிப்பகம்,
-சால்ட் பதிப்பகத்தின் கவிஞர் பாலைவன லாந்தர் எழுதிய "உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்" வெளியீட்டு விழாவில் வாசித்த கட்டுரை. காணொளி கீழே இணைப்பில் :)
https://www.youtube.com/watch?v=0_qR516fHoc
No comments:
Post a Comment