துளியின் வலி


சதுப்புகள் படுத்துறங்கும் நிலம்
படிமங்கள் உள்ளடக்கிய
நீண்ட மலைகளில் பறவைகளின் நிசப்தம்
ஓடும் நதியின் கீழ் அனைத்தும் மெளனிக்கின்றன
இளமஞ்சள் பூக்கும் கரை ஓரத்தில்
காத்திருக்கும் அவளின் ஒற்றைக்கண்ணீர் துளி
பிரளய வலி செய்கிறது
 
நன்றி : உயிரோசை
                                              ~  ~  ~

10 comments:

  1. நண்பரே,

    மிகவும் அருமையாக வடித்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. //ஓடும் நதியின் கீழ் அனைத்தும் மெளனிக்கின்றன//

    நிதர்சன வரி(லி).

    ReplyDelete
  3. பிரளய வலி.. :(

    ReplyDelete
  4. ஒற்றைக் கண்ணீர் துளி , கரையை மீறி நதியில் சேர்ந்து , நதியை உப்பாக்கும் முன் ... யாரேனும் அல்லது நீங்களாவது அவளின் காத்திருப்பை முடித்து வைப்பீர்களாக .

    நன்றாக வந்திருக்கிறது வேல்கண்ணன் .
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. க‌விதை ந‌ன்று ந‌ண்பா. வாழ்த்துக‌ளும்

    ReplyDelete
  6. நண்பர் கனவுகளின் காதலனுக்கு நன்றி

    நன்றி சத்ரியா

    வாங்க ஆறுமுகம் முருகேசன் எனது நன்றியும் அன்பும்

    நன்றி ஜெனோவா கவிதையான பின்னுட்டத்திற்கு
    //நீங்களாவது // முயற்சி செய்கிறேன் நண்பரே

    உயிரோடை , பா.ரா தொடர் ஊக்கத்திற்கும் அன்பிற்கும்
    நன்றியும் அன்பும்
    *****

    ReplyDelete
  7. வார்த்தைகளின் உச்சம்
    கவிதை வலிதான் !

    ReplyDelete
  8. ஆம் உண்மைதான் தோழி ஹேமா கருத்துக்கு நன்றி

    ReplyDelete