பேரழிவும் பேரண்டமும்

 
காரணங்கள் ஆயிரம் இருக்கட்டும்.
பேரழிவில் மூழ்கிவிடும் தருணத்திலும்
நீயோ நானோ நாமோ
பரிமாறும் முத்தம்
உன்னை எனக்குள் என்னை உனக்குள்
இடப்பெயர்ச்சி செய்யுமாயின் .....
.... யார் மறுப்பது
மற்றுமொரு பேரண்டமே 
உருவாகக்கூடும் என்பதை.

11 comments:

  1. வேல்கண்ணன்,

    ஆழ்ந்த அனுபவக் கவிதை.

    அருமை.

    ReplyDelete
  2. நண்பரே,

    அருமையான ஆக்கம்.

    ReplyDelete
  3. முத்தங்களால்
    உருவாக்கப் படும்
    அண்டத்தின்
    வண்ணத்தினை
    உணரமுடிகிறது
    உங்கள் வரிகளால்.

    ReplyDelete
  4. ஹ்ம்ம் இதுகூட disaster management தான் :))

    theory of transfer ....

    நல்லா இருக்குங்க வேல்கண்ணன்

    ReplyDelete
  5. //

    பரிமாறும் முத்தம்
    உன்னை எனக்குள் என்னை உனக்குள்
    இடப்பெயர்ச்சி செய்யுமாயின் .....//

    அருமையான வரிகள் கண்ணன்!

    ReplyDelete
  6. classsss....:-).....romba arumaiyaa irukku...azhagaana vaarthai korpukal......also am so thankful for ur visiting....thankxssssss

    ReplyDelete
  7. நல்லாயிருக்குங்க.

    ReplyDelete
  8. ஆதாம் ஏவாளுக்கு முந்தைய பதிவாய் இது இருக்ககூடுமோ வேலகண்ணன்? முத்தமோ மொத்தமோ பரிமாற்றங்கள்தான் மாற்றங்களின் துவக்கம்.

    ReplyDelete
  9. நண்பர் சத்ரியனுக்கு
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    நண்பர் கனவுகளின் காதலனுக்கு மிக்க நன்றி

    நன்றி ஹேமா (அதே தான்)

    நண்பர் D.R அசோக்கு நன்றி

    நன்றி சந்தன கிருஷ்ணன்
    புரிதலுக்கும் வருகைக்கும்

    வாங்க பத்மா ரொம்ப நன்றிங்க

    நன்றி சுகிர்தா தொடர் வாசிப்புக்கும்

    வாங்க ஹேமிகிருஷ்,
    உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும்
    மிகுந்த நன்றியும் அன்பும்

    நண்பர் செல்வராஜ் ஜெகதிஷனுக்கு
    நன்றியும் அன்பும்

    வாங்க சுந்தர் ஜி
    //பரிமாற்றங்கள்தான் மாற்றங்களின் துவக்கம்//
    நன்றி ஜி வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete