ஜூன்'19 'க்ளைமேட்' கலைவெளி மாத இதழில் வெளியான எனது கவிதை.


இரண்டு கவிதை:
----------------------
1
நெளிந்த சொற்களுக்குள் மெனெக்கெட்டு
எப்படியோ மீனை பிடித்துவிட்டேன்.
செதில் நீக்கம் செய்துகொண்டிருக்கையில் 
பூண்டு மஞ்சள் கல் உப்பை தயார் நிலையில் வைத்து இருக்கிறீர்கள்.
மீனை ஆய்ந்து கொண்டிருக்கும் போதே குழம்பை கொதிக்க வைக்கிறீர்கள்
தூய்மையான துண்டாடிய மீன்களை உங்களிடம் தருகிறேன்.
"தலைப்பிரட்டையை வைத்து என்ன செய்வது, மீன் எங்கே?"
இரக்கமில்லாத உங்களின் கேள்விக்கு
எங்கிருந்து கொண்டுவருவது கவிதையை

----------------------
2
ஒவ்வொரு நாளையும் ஒரு வட்டத்துக்குள் கடக்கிறேன்.
நேற்றைய வட்டத்தின் உட்புற சுவர் மஞ்சள்
முன்தினம் கரும்பச்சை
அதற்கும் முன் அடர்நீலம்
'அதெல்லாம் வேண்டாம்'
மத்திமவயது பெண் கதவை சாத்தும்
இன்றைக்கு கருப்பு
என்றென்றைக்குமே கனவுக்குள் வெள்ளை மட்டுமே உலவுகிறது

--
No photo description available.

நன்றி : 'க்ளைமேட்'

No comments: