Showing posts with label எங்கள் ஊர் வரைப்படம். Show all posts
Showing posts with label எங்கள் ஊர் வரைப்படம். Show all posts

சேதி

(11.11.09 தேதியிட்ட ஆனந்த விகடனில் வந்த எனது குறுங்கவிதை)

கதை சொல்லி
பெரியப்பாவின்
சாவுச் செய்தி வந்தது
எஸ். எம். எஸ் -ல்

நன்றி : ஆனந்த விகடன்

எங்கள் ஊர் வரைப்படம் (கோடுகளால்அல்ல நிகழ்வுகளை கொண்டு.....)

மேலத்தெருவுல வித்துட்டு
கீழத்தெருவுக்கு வந்தான்
பஞ்சுமிட்டாய்க்காரன்
ஒண்ணா தான் இருக்கு
சிரிப்பும் இனிப்பும்
--------------------------------
குலுங்கி குதிச்சு
வந்துபோச்சு
மினி பஸ்ஸு
--------------------------------
ரம்மும் கையுமா
நல்லாத்தான் இருக்காரு
சுருட்டு தாத்தா
---------------------------------
இந்த வருட திருவிழாவிற்கும்
ஓடவில்லை
ஆத்து தண்ணி
------------------------------------
வீடு வீடாய் பிடித்தாட்டியது
வண்ணத்தொலைக்காட்சி
---------------------------------
சாமியாடி தாத்தா
சைவத்துக்கு மாறியாச்சு
---------------------------------
ஏச்சு மட்டும் குறையல
---------------------------------
கதைச்சொல்லி
அரிதானது
பக்கத்தூர்
பெரியப்பா சாவு
SMS - ல் வந்தது
-----------------------
ஊருக்குபோய் வந்த போது
சைக்கிள் கடை மாமா கேட்டார்
'சாதி சனமெல்லாம் எப்படியிருக்கு?'
நினைத்துகொண்டேன்
சாதி இருக்கும் வரை.....
சனம் எப்படி?
-----------------------------------
நிகழ்வுகள் தொடரும்........