யுகம்



நமக்கிடையில் எப்போதும் இருக்கும் 
பெரும் மலையொன்று 

இந்த கணத்தில் மாறிப்போனது 
மவுனமாக 
கானல் நதியொன்று 
இந்த கணத்தில் மாறிப்போனது 
பனி மழையாக
கொடிய நாகமொன்று 
இந்த கணத்தில் மாறிப்போனது 
ஆலம் விழுதாக 
அடிவயிற்றில் பிசைந்த வலியொன்று
........விடு .......... பட்டு 
செல்லும் இந்த கணத்தில் 
வியர்த்து நனையும் தேகத்துடன் 
கிடப்போம் அப்படியே.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_21.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

அப்பாதுரை said...

யதார்த்தம் பேசுகிறது.