பதிலி




ஆழிப் பெருங்காற்றில் 
அணையாமல் காத்து இருக்கிறேன். 
அத்தனை கண்ணீ ர் துளியிலும்  
நனையாமல் பார்த்துக் கொள்கிறேன். 
யாரும் அறியாமல் அவ்வளவு ஆழத்தில் 
ஒளித்து வைத்திருக்கிறேன். 

தோன்றிய நாளிலிருந்து 
தொடர்ந்திருக்க வேண்டும்.
இப்போது என் முறை.
பல யுகங்கள், எல்லையற்ற 
பதில்களை 
தின்றும் தீராத இந்தக்கேள்வி. 

வீதியோரம் நின்றிருந்த தசரதன் 
தன்னிடம் வகை ரீதியாக 1000 பெண்கள் 
இருப்பதாக கூறினான். 
இட வசதி தானே அமைத்து கொடுப்பதாகவும் 
பணத்துடன் ஆணுறையும் சொந்தமாக 
கொண்டு வரச்சொன்னான்.
999 ஆணுறைகள் மற்றும் இந்த கேள்வியுடனும் 
சென்று கொண்டு இருக்கின்றேன். 

நன்றி : மலைகள்.காம்

No comments: