கதிரொளியால் உருகாத உறைபனி கட்டிகள்




உன்னுடன்
கடற்கரை சாலையில் நடந்தேன்.
அங்காடித் தெருக்களைக் கடந்தேன்.
திரையரங்குகளை விமர்சித்தேன்.
கோவில்களை வலம் வந்தேன்.
குளங்களை நேசித்தேன்.
குறிப்பாக, அந்த வில்வ மரத்தடி குளம்.

கனமற்று போன கணத்தில்
ஒரே ஒரு பொழுதையேனும் குற்றமில்லா
நகரத்தில் வாழ்வதை அறிந்தேன்.

எல்லா பொழுதுகளும் வெண்மையில்
கழிக்க விரும்பினாலும்,
இடர் செய்யும் அந்நியர்களின் தலையிடும்
அனுமதியுடனே நிகழ்ந்தது.

உன்னிடமிருந்து வரப்பெற்ற
இந்த வெறிச்சோடிய குறுஞ்செய்தியில்
யாதொன்றையும் அறியேன்
எதனின் பொருட்டு பித்தாக வேண்டும் என்பதை.

நன்றி : மலைகள்.காம்
நிழற் படம் Thanks to Goran Kalanji 

No comments: