இமைகளை மூடிக்கொள்
உன் இருவிழியின்
எல்லையற்ற வானவில்லை
என் இருவிழியால்
உள் வாங்கி கொள்ள
முடியவில்லை .
சற்று
இமைகளை மூடிக்கொள்
நின்று செறித்து கொள்கிறேன்.
*********************
நேற்று
என்கனவில்
நிலவொன்று
உருகி உருகி
வழிந்து கொண்டிருந்தது
வெள்ளை நதியாய்
என் நிலத்தில்.
நதியில் ஒன்றிரண்டு
நட்சத்திரங்களும்
விழுந்து மூழ்கின.
என் பொழுதுகள்
அனைத்தும் மிதந்து
கொண்டிருந்தன
கரை ஒதுங்க மனமில்லாமல் .
எனக்கு தெரியும்
நிலவாய் நீதான் என்று.
***************************
No comments:
Post a Comment