சேதி

(11.11.09 தேதியிட்ட ஆனந்த விகடனில் வந்த எனது குறுங்கவிதை)

கதை சொல்லி
பெரியப்பாவின்
சாவுச் செய்தி வந்தது
எஸ். எம். எஸ் -ல்

நன்றி : ஆனந்த விகடன்

9 comments:

கல்யாணி சுரேஷ் said...

இது மாதிரியான மாற்றங்கள் வரமா சாபமா? குறுந்தகவல் வழியாக பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு மரணம் என்பது இலகுவானதொரு விஷயமாகி விட்டதா என்ன?

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

படித்தவுடன் முதலில் மனதில் எழுவது ஒரு மென்சிரிப்பு, பின் வரும் புரிதலில் காலம் இன்னமும் உணர்வுகளைச் சுருக்கிடும் என்றே தோன்றுகிறது.

அன்புடன் நான் said...

கதை சொல்லி
பெரியப்பாவின்
சாவுச் செய்தி வந்தது
எஸ். எம். எஸ் -ல்//


இத‌ இத‌ இத‌ தான் எதிர்ப்பார்தேன். ந‌ச்!

பா.ராஜாராம் said...

கல்யாணி,கவிதை அத்துடன் நிற்கவில்லை..."கதை சொல்லி பெரியப்பாவுடன்"என்று இணைகிற போது அடர்த்தியை கவனியுங்கள்...
மக்கா,ரொம்ப நாட்க்களுக்கு அதிர்ந்துகொண்டே இருக்க போகிறது...இத்துயர செய்தி...மீட்டும் வலி..இது
கொண்டுபோய் சேர்க்கிற இடம்.எவ்வளவு அவஸ்த்தையை தருகிறது நாலு வரிகள்.... ரொம்ப,ரொம்ப,ரொம்ப பிடிச்சு இருக்கு வேல்கண்ணா.வாழ்துக்கள்!

ஹேமா said...

கண்ணன்,உறவுகளின் சுருக்கத்தைச் சுருக்கமாகவே சொல்லிவிட்டீர்கள்.

இன்றைய கவிதை said...

அந்தச் சமயத்தில் தங்களது
செல்பேசி உயிர்த்திருந்ததா?!

-கேயார்

வேல் கண்ணன் said...

கல்யாணி சுரேஷ் வருகைக்கு நன்றி
தொழில் நுட்ப வளர்ச்சியை நோக்கிய கேள்வி இது.
*******************
நண்பர் கனவுகளின் காதலனுக்கு நன்றி.
//உணர்வுகளைச் சுருக்கிடும் என்றே தோன்றுகிறது// எனக்கும் பயமாக தான் உள்ளது.
****************************
தோழர் கருணாகரசுக்கு நன்றி
********************
பா.ரா அவர்களுக்கு நன்றி.
//மீட்டும் வலி..இது
கொண்டுபோய் சேர்க்கிற இடம்.எவ்வளவு அவஸ்த்தையை தருகிறது நாலு வரிகள்//
எனக்குள் ஏற்பட்ட வலியை கவிதையின் வழியாக பகிர்ந்தேன்.
*****************
நன்றி ஹேமா
****************
'இன்றைய கவிதை' நண்பர் கேயார் அவர்களுக்கு நன்றி,
ஆம், உயிர்த்திருந்தது எனது அலைபேசி கதை சொல்லிகள் மீதிருந்த அன்பும் அக்கறையும்

மண்குதிரை said...

எளிய வரிகளில்...
அருமை.

rvelkannan said...

நன்றி மண்குதிரை