தடாக உளி


இந்த குளத்தில் எறிகிறேன் 
ஒழுங்கற்றவைகளாக 
ரயிலடி அங்காடித்தெருவை 

பேருந்து 
நிறுத்தத்தை 
கடற்கரை மாலையை 

பனி இரவுகளை
குளத்திலிருந்துயெழுபவை 
வட்டமிடுகின்றன
கனசெவ்வகமாகவும் 
எண்கோணமாகவும்  
வெகு ஆழத்தில் பனி உளியொன்று
சிறு சிறு கற்களாய் உருமாற்றியது
எறிந்த கற்கள் குளத்தில் மிதக்கின்றன
நானோ காற்றில் கரைந்தவாறு.

நன்றி : உயிர் எழுத்து , நவம்பர் 2012

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சொன்ன விதம் அருமை...

அப்பாதுரை said...

சில சுமைகளையும் அப்படி நினைவுகளாய்க் கரைத்துப் பனிக்கட்டிகளாக உறைய வைக்க முடியுமென்றால்.. ஹ்ம்ம்ம்.

Joelson said...

nice

Anonymous said...

வணக்கம்
இன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/03/blog-post_28.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-