அசையா பெண்டுலம்


நொடிப் பொழுதில் மாறிப் போகின்றேன்
நினைவிலியாகவும் கனவிலியாகவும்
அகத்தடிமையாகவும் புறம்போக்காகவும்.
தனித்தே கிடக்கிறேன்
கனவிற்கும் நினைவிற்கும் ஒரு தப்படி
தெளிவில்லாமல் அலைவுறுகிறேன்.
நிதானித்து நிலையாய் நகர்கிறது காலம்.
நன்றி : தீராநதி. செப்டம்பர்' 2017