Showing posts with label ஆனந்த விகடன். Show all posts
Showing posts with label ஆனந்த விகடன். Show all posts

ஆதியும் அந்தமும்



அடர் வனமொன்றில் 
புதைந்திருக்கும் 
உன் மெளனத்தின் 
சொற்களுடன் எழுகிறது 
ஒரு பறவை ஒரு மிருகம் 

பெருமழையொன்றில்
குளிர்ந்திருக்கும் 
உன் பார்வையின் 
ஆழங்களுடன் விழுகிறது 
ஒரு ஆலங்கட்டி ஒரு பாறை 

மென்கொலுசொலியில் 
ஒளிர்ந்திருக்கும் 
உன் புன்னகையின் நெளிவுகளுடன் சுரக்கிறது 
ஒரு துளி பால் ஒரு துளி விஷம்

மீளா துயரத்தில்
மீட்டியவாறேயிருக்கும்
உன் சுவாசத்தின் 
ராகங்களுடன் துளிர்க்கிறது 
ஒரு வாழ்வு ஒரு மரணம்

சேதி

(11.11.09 தேதியிட்ட ஆனந்த விகடனில் வந்த எனது குறுங்கவிதை)

கதை சொல்லி
பெரியப்பாவின்
சாவுச் செய்தி வந்தது
எஸ். எம். எஸ் -ல்

நன்றி : ஆனந்த விகடன்