பகிர்ந்து கொண்டிருந்தார் நமக்கான
வலியை*
சான்று சொன்ன புகைப்படத்தை
கேள்வி கேட்டு கொண்டிருந்தாள்
மடியில் அமர்ந்த என்சிறுமி
பத்து பனிரண்டு படத்தில்
இயன்ற அளவு கைகளிலும்
கொள்ளாத அளவு மனதிலும்
கனங்களை கொண்டிருந்தார்கள்
"இவங்கள யாருப்பா ''
'நம்ம சொந்தகாரங்க '
"இவ்வளவு பேர் எங்கேயிருந்து வராங்க"
'அவங்க ஊர்லயிருந்து '
"திரும்பி எப்ப போவாங்க "
'......'
(*வலி - இலட்சியக்கவி அறிவுமதி - தமிழ் மண் வெளியிடு )
10 comments:
அண்ணன் அறிவுமதி பக்கங்களில்
பகிர்ந்து கொண்டிருந்தார் நமக்கான
வலியை*
100% உண்மைதான் கண்ணன்.
கல்யாணி சுரேஷ்க்கு நன்றி
நண்பரே,
கனங்களை சற்று இறக்கிவைத்து மூச்சு விடட்டும் அவர்கள்.
தொடருங்கள்...
கண்ணன் இவைகள் படங்களா...இல்லை ஈழத்தமிழனின் ஆவணப் பதிவுகளா.சின்னவளுக்கும் சொல்லி வையுங்கள் தோழரே.
நண்பர் கனவுகளின் காதலனுக்கு நன்றி
ஹேமா -விற்கு நன்றி
//ஈழத்தமிழனின் ஆவணப் பதிவுகளா.சின்னவளுக்கும் சொல்லி வையுங்கள்//
புரிய வைப்பதும் எனது கடமையே தோழி
தொண்டையடைக்கும் கனமான விரிகள், அண்ணனுக்கும் உங்களுக்கும் .............. வலியை பராட்ட முடியவில்லை தோழா.
சி.கருணாகரசு-க்கு
என்று அடைப்புகள் நீங்கும் தெரியவில்லை தோழா ,
தெற்கில் இருந்து வரும் காற்றில் இன்னும் இன்னும் ரத்த வாடையும் பிணவாடையும் அடித்து கொண்டு தான் இருக்கிறது
சின்னவளுக்கு மட்டுமில்லை தமிழ் அகத்தில் சிறு மனது கொண்டோருக்கும் ...புரிய வையுங்கள் தோழரே
வருக வருக நண்பர் சதீஷ் அவர்களே
//புரிய வையுங்கள் தோழரே//
'புரியவைப்போம்' தோழரே
Post a Comment