
கல்கி 13, அக்டோபர் 19 இதழில் வெளிவந்த என்னுடைய இரண்டு கவிதை:
1. ரொட்டி
--------------
எனக்குக் காரம் தோழிக்கோ இனிப்பு பிடிக்கும்;
கடைசி மகள் உவர்பைச் சப்புக்கொட்டி ருசிக்கிறாள்;
அலுவலக நண்பர் புளிச்சா கீரையை விரும்பி உண்கிறார்;
எல்லோருக்குமான உணவை எப்படித் தயாரிப்பது என்று
முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன் நெரூதா,
உங்களின் ரொட்டிகளைப் போல..
2.நம் வீடு
------
என் அடைசலில் உருவாகிய கொசு உன்னைக் கடித்தது
உன் நிரவலில் வளரும் பூனை என்னைப் பிறாண்டியது
வேட்டை நாய்களை ஏவினேன்
பசித்த புலியின் கூண்டு திறந்து விடுகிறாய்
ஆற்றின் வழித்தடத்தில்
நாம் அமைத்த வீட்டினை நோக்கி
ஒற்றை யானை வந்து கொண்டிருக்கிறது.
நன்றி : கவிஞர் Amirtham Surya(அட்டகாசமான வடிவமைப்புக்கு நன்றி நண்பா) &
கல்கி வார இதழ்.
No comments:
Post a Comment