பொலிவற்ற முகங்கள்
இருள் கவிழ்ந்த தேவதைகள்.
இலையசைவு துளியுமில்லை
அனல் சுவாசம்
குளிர் வற்றிய கோடை நிலவு
நிழலற்ற நெடுஞ்சாலை முடிவற்ற வானம்
அயர்ந்த உடல் அசைக்கவியலா கால்கள்
அந்தியில் தொடங்கும் ஒப்பாரி நடுஇரவுக்கும்
வலிமுனகல் நடுவே உறக்கம் மிகவும் கடிது
நாளொன்று நெடுயுகம்
ஊரடங்கில் காலமும் முறுவலித்துக் கொண்டிருக்கிறது
ஓய்வற்ற பசியோ கொடிதினும் கொடிது

1 comment:

அ. வேல்முருகன் said...

ஆம்

கொடிது கொடிது
கொரோனாவை காட்டிலும்
கொடிது பசி